சென்னை: சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் உள்ள சி.வி.ராமன் சைன்ஸ் பார்க் கட்டிடம் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு கொரோனா சிறப்பு வார்டாக மாற்றப்பட்டு, மாநகராட்சியிடம் ஒப்படைக்கப்பட்டது. பின்னர், கடந்த அக்டோபர் மாதம் சிறப்பு வார்டு மூடப்பட்டு மீண்டும் அண்ணா பல்கலைக்கழகத்திடம் ஒப்படைக்கப்பட்டது.
கடந்த 17ம் தேதி அண்ணா பல்கலைக்கழக ஊழியர் முத்துகுமார் இந்த கட்டிடத்தை சுத்தம் செய்ய வந்த போது, அங்கிருந்த 16 லட்சம் மதிப்புள்ள 41 புரஜக்டர்கள் மாயமாகி இருந்தன.