அண்ணாநகர்: கொரோனா பரவலால் கடந்த மே 5ம் தேதி மூடப்பட்ட கோயம்பேடு மொத்த காய்கறி அங்காடி 5 மாதங்களுக்கு பிறகு மீண்டும் திறக்கப்பட்டது. இதையடுத்து கடந்த 16ம் தேதி முதல்கட்டமாக சிறு, மொத்த காய்கறி கடைகள் திறக்கப்பட்டது. அடுத்த கட்டமாக வரும் 23ம் தேதி சிறு, மொத்த பழக்கடைகள் திறக்கப்பட உள்ளன. இதேபோல் வரும் 30ம் தேதி சிறு, மொத்த காய்கறி கடைகள் திறக்கப்பட உள்ளது.