சென்னை: தமிழக காங்கிரஸ் தலைவர் கே.எஸ்.அழகிரி நேற்று வெளியிட்ட அறிக்கை: பாஜ அரசின் விவசாய விரோதச் சட்டங்களை எதிர்த்து வரும் 22ம் தேதி கோவை கருமத்தம்பட்டி, சோமனூர் மெயின் ரோட்டில் மாபெரும் விவசாயிகள் எழுச்சி மாநாடு மாலை 3 மணிக்கு தொடங்குகிறது. மாலை 5.30 மணியளவில் நிறைவாக ஏர் கலப்பை பேரணியை நடத்துவதென முடிவு செய்யப்பட்டிருக்கிறது. இதில், தமிழக மேலிட பொறுப்பாளர் தினேஷ் குண்டு ராவ் மற்றும் காங்கிரஸ் மூத்த தலைவர்கள், முன்னணி தலைவர்களுடன் நானும் பங்கேற்கிறேன். நவம்பர் 28ம் தேதி மாவட்ட காங்கிரஸ் கமிட்டிகள் தங்கள் பகுதிக்கு உட்பட்ட ஏதாவது ஒரு சட்டமன்ற தொகுதியில் ஏர் கலப்பைப் பேரணியை நடத்துகின்றனர். கள்ளக்குறிச்சியில் நான் பங்கேற்கிறேன்.