எதிர்பார்த்த கூட்டம் வராததால் தமிழகத்தில் திறக்கப்பட்ட தியேட்டர்கள், மீண்டும் மூடுவதற்கு தயாராகி வருகின்றன.தமிழகத்தில் கடந்த நவ.10ம் தேதி முதல் தியேட்டர்கள் திறக்கப்பட்டன. தமிழகம் முழுவதும் 1,112 தியேட்டர்கள் உள்ளன. இவற்றில் வெறும் 300 தியேட்டர்கள் மட்டுமே திறக்கப்பட்டன. புதிய படங்கள் ரிலீஸ் ஆகாததாலும் கூட்டம் வராது என்பதாலும் மற்ற தியேட்டர்கள் திறக்கப்படவில்லை. இதற்கிடையே தியேட்டரில் படம் திரையிட வசூலிக்கப்படும் விபிஎப் கட்டணத்தை தியேட்டர் அதிபர்களே கட்ட வேண்டும் என தயாரிப்பாளர்கள் கூறினர். தியேட்டர் அதிபர்கள் இதை ஏற்க மறுத்தனர். இதனாலும் புதிய படங்கள் திரைக்கு வரவில்லை. இந்நிலையில் நவம்பர் மாதம் வரை விபிஎப் கட்டணத்தை வசூலிக்க மாட்டோம் என க்யூப் டிஜிட்டல் நிறுவனம் அறிவித்தது. இதனால் தீபாவளிக்கு பிஸ்கோத், மாரிஜுவானா, இரண்டாம் குத்து ஆகிய படங்கள் திரைக்கு வந்தன.