நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி

சென்னை: நாளையே மாணவர்கள் சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிகளில் சேர வேண்டும் என மருத்துவக்கல்வி இயக்குனரக அறிவிப்பால் மாணவர்கள் அதிர்ச்சி அடைந்தனர். ஊருக்கு செல்ல முடியாத நிலையில் உள்ள மாணவர்கள் தவித்து வருகின்றனர். வழக்கமாக ஒருவாரத்திற்குள் கல்லூரிகளில் சேர வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்படும். வரும் 20ம் தேதி நீதிமன்றத்தில் வழக்கு வருவதன் காரணமாக, அதற்குள் மாணவர்கள் கல்லூரிகளில் சேர உத்தரவு எனத் தகவல் தெரிவிக்கப்படுகிறது. கல்லூரிகளில் சேரும் காலக்கெடுவை நீட்டிக்க வேண்டும் என மாணவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Related Stories: