வால்பாறை: வால்பாறை அருகே ஷேக்கல்முடியில் வனத்துறை முகாமை யானைகள் உடைத்து அட்டகாசத்தில் ஈடுபட்டன. யானைகளை வனத்துறையினர் வனத்திற்குள் விரட்டியடித்தனர். வால்பாறையை அடுத்து உள்ள சோலையார் எஸ்டேட்டில் நேற்று காலை 5 யானைகள் தோட்ட தொழிலாளர்கள் குடியிருப்பு மற்றும் மருத்துவ அலுவலர் குடியிருப்பு பகுதியில் உலா வந்ததால் பீதி நிலவியது. இத்தகவலறிந்த வனத்துறையினர் சம்பவயிடமம் சென்று பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர். இந்நிலையில் மருத்துவர் குடியிருப்புக்குள் நுழைய முயன்ற யானைகளை வேன் மற்றும் ஒலிபெருக்கியால் சத்தம் எழுப்பி வனத்திற்குள் விரட்டினர். ஆனால் தொடர்ந்து அதே பகுதியில் உள்ள சிறுவனப்பகுதியில் முகாமிட்ட யானைகள், வால்பாறை முடீஸ் பஜார் சாலையை கடக்க முயன்றன.