உடுமலை: தொடர் மழை காரணமாக அமராவதி, திருமூர்த்தி அணைகளின் நீர்மட்டம் உயர்ந்துள்ளது. உடுமலை சுற்று வட்டார பகுதி மற்றும் மேற்கு தொடர்ச்சி மலையில் வடகிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 4 நாட்களாக பெய்து வரும் தொடர் மழையின் காரணமாக அணைகளின் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. அமராவதி அணையின் நீர்மட்டம் நேற்று முன்தினம் 67.39 அடியாக இருந்தது. நேற்று நீர்வரத்து அதிகரித்ததால், நீர்மட்டம் 68.08 அடியாக உயர்ந்தது.
இதேபோல, பிஏபி தொகுப்பு அணைகளிலும் தொடர் மழை காரணமாக நீர்வரத்து அதிகரித்துள்ளது. வால்பாறையில் பெய்துவரும் மழையின் காரணமாக சோலையாறு அணையில் இருந்து 778 கன அடி நீர் வெளியேற்றப்படுகிறது.