எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடக்கம்

சென்னை: எம்.பி.பி.எஸ்., பி.டி.எஸ். மருத்துவ படிப்புகளுக்கான கலந்தாய்வு சென்னையில் தொடங்கியது. சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில் மருத்துவ படிப்பு கலந்தாய்வு நடைபெறுகிறது. முதல் 3 நாட்களுக்கு அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீடு இடங்கள் நிரப்பப்பட உள்ளன. அரசு பள்ளி மாணவருக்கான 7.5% உள் ஒதுக்கீட்டுக்கான தரவரிசை பட்டியலில் 951 பேர் இடம் பெற்றுள்ளனர். அரசு பள்ளி மாணவர்களுக்கான உள் ஒதுக்கீட்டில், 405 இடங்களுக்கு விண்ணப்பித்த 951 பேருக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது. நேரு உள் விளையாட்டு அரங்கில் மருத்துவ கவுன்சில் நடைபெறுவது இதுவே முதன்முறையாகும். 

Related Stories: