சென்னை: கர்நாடகாவில் இருந்து தனியார் பயணிகள் விமானம் நேற்று முன்தினம் இரவு 47 பயணிகள், 5 விமான ஊழியர்களுடன் மைசூர் சென்றது. அங்கு சூறைக்காற்றுடன் பலத்த மழை கொட்டியதால், விமானத்தை தரையிறக்க முடியவில்லை. இதனால், சென்னைக்கு திருப்பி அனுப்பப்பட்டது. நேற்று முன்தினம் இரவு 10 மணியளவில் அந்த விமானம் சென்னையில் தரையிறங்க வந்து கொண்டிருந்தது. அப்போது திடீரென விமானத்தில் இயந்திரக்கோளாறு ஏற்பட்டது. இதுபற்றி விமான நிலைய கட்டுப்பாட்டு அறைக்கு விமானி தகவல் கொடுத்தார். அவர்கள், விமானத்தை தொடர்ந்து வானில் வட்ட மடிக்கச் செய்துவிட்டு, உடனடியாக பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்தனர்.