வேல் யாத்திரை நிறைவு தேதி மாற்றம்

சென்னை: தமிழக பாஜ சார்பில் வேல் யாத்திரையின் 2ம் கட்ட சுற்றுப்பயணம் நேற்று திருவண்ணாமலையில் தொடங்கியது. டிசம்பர் 6ம்தேதி  திருச்செந்தூரில் யாத்திரை முடிவடைய உள்ளதாக தமிழக பாஜ சார்பில் அறிவிக்கப்பட்டது. யாத்திரை நிறைவில் தேசிய பாஜ தலைவர் ஜே.பி.நட்டா  கலந்து கொள்கிறார்.

ஆனால் அன்றைய தினம் பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் அதை மாற்ற தமிழக பாஜ தலைமை முடிவு செய்துள்ளது.  அதன்படி, ‘‘பாஜவின் வேல் யாத்திரை டிசம்பர் 6க்கு பதில் 7ம் தேதி திருச்செந்தூரில் நிறைவடையும்’’ என தமிழக பாஜ அறிவித்துள்ளது.   திருவண்ணாமலையில் இருந்து வேல் யாத்திரை செல்ல முயன்ற மாநில பாஜ தலைவர் முருகன் உள்ளிட்டோர் கைது செய்யப்பட்டனர்.

Related Stories: