சின்னாளபட்டி: ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் திரியும் தெருநாய்களால் பொதுமக்கள் அச்சமடைந்துள்ளனர். அவற்றை அப்புறப்படுத்த பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். திண்டுக்கல் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில், அந்தந்த பகுதிகளில் உள்ள தாலுகா அலுவலகங்களில் வாரந்தோறும் திங்கட்கிழமைகளில் மனுநீதி நாள் நடந்து வருகிறது. ஆத்தூர் தாலுகா அலுவலக வளாகத்தில் 10க்கும் மேற்பட்ட தெருநாய்கள் திரிகின்றன.