மீனம்பாக்கம்: துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, 15 நாட்கள் பயணமாக இன்று தமிழகம் வருகிறார். அவருக்கு, விமான நிலையத்தில் வரவேற்பு அளிக்கப்படுகிறது. துணை ஜனாதிபதி வெங்கையா நாயுடு, பல்வேறு நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதற்காக இன்று மாலை 5.05 மணிக்கு இந்திய விமானப்படை தனி விமானத்தில், தெலங்கானா மாநிலம் பேகம்பேட்டில் இருந்து சென்னை வருகிறார். பழைய விமான நிலையத்தில் அவருக்கு வரவேற்பு அளிக்கப்படுகிறது. அதன்பின்னர், அங்கிருந்து காரில் புறப்பட்டு சென்னை ஈஞ்சம்பாக்கத்தில் உள்ள சேஷாத்திரி அவீன்யூவிற்கு சென்று தங்குகிறார்.