செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது : தலைமை பொறியாளர் அசோகன்

சென்னை : செம்பரம்பாக்கம் ஏரியில் இருந்து தற்போதைக்கு தண்ணீர் திறக்கப்படாது என்று பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் அசோகன் தெரிவித்துள்ளார். செம்பரம்பாக்கம் ஏரியில் ஆய்வு செய்த பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், 2015ல் நடந்ததை போல கனமழை பெய்தால் தான் தண்ணீர் திறக்கப்படும் என்றும் மழை குறைந்ததால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு வரும் நீரின் அளவு குறைந்து விட்டது என்றும் நீர்மட்டம் 22 அடியை தாண்டியதும் வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டு ஏரி திறக்கப்படும் என்றும் தெரிவித்தார்.

Related Stories: