கார் கவிழ்ந்து 2 பேர் பலி

சென்னை: மேற்கு தாம்பரம் சாய் நகரை சேர்ந்தவர் நாத் (33). இவரது மனைவி ஐஸ்வர்யா (30). இவர்களது மகன் ஆனந்தராஜ் (2). நேற்று  முன்தினம் காஞ்சிபுரத்தில் உள்ள கோயில்களுக்கு நாத் குடும்பத்துடன் காரில் சென்றார். நாத்தின் தந்தை ராஜன் (60), ஐஸ்வர்யாவின் தாய்  கனகம் (55) ஆகியோர் உடன் சென்றனர். கோயில்களில் தரிசனம் முடிந்து, இரவு சென்னை புறப்பட்டனர். வாலாஜாபாத் அருகே சென்றபோது, கட்டுப்பாட்டை இழந்த கார் சாலையோர மரத்தில்  மோதி, அருகில் உள்ள பள்ளத்தில் கவிழ்ந்தது. இதில் ராஜன், கனகம் ஆகியோர்  இறந்தனர்.

Related Stories: