சென்னை: சென்னையில் உள்ள ராஜிவ்காந்தி அரசு பொது மருத்துவமனை இந்தியாவில் உள்ள மிகவும் பழமையான மருத்துவமனைகளில் ஒன்று. பிரிட்டிஷ் ராணுவ வீரர்களுக்கு சிகிச்சை அளிக்க, கடந்த 1664ம் ஆண்டு நவம்பர் 16ம் தேதி சர் எட்வர்ட் விண்டர் என்பவரால் ஜார்ஜ் கோட்டையில் இந்த மருத்துவமனை தொடங்கப்பட்டது.
பின்னர், 1772ம் ஆண்டு அங்கிருந்து சென்ட்ரல் பகுதிக்கு இடமாற்றம் செய்யப்பட்டு, 1835ம் ஆண்டு மருத்துவக் கல்லூரியாக மாற்றப்பட்டது. தொடர்ந்து 1850ம் ஆண்டு அக்.1ம் தேதி சென்னை மருத்துவ கல்லூரியாக மாற்றப்பட்டது. உலகில் பெண் ஒருவர் முதன்முறையாக மருத்துவ பட்டம் பெற்றது இந்த மருத்துவமனையில்தான்.