நாகர்கோவில்: சமையலர், துப்புரவு பணிக்கு நடைபெற்ற நேர்காணலுக்கு குமரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் கொட்டும் மழையில் பட்டதாரி பெண்களும் திரண்டனர். குமரி மாவட்டத்தில் ஆதி திராவிடர் நலத்துறையின் கீழ் இயங்கும் விடுதிகளில் சமையலர் 12 பணியிடங்கள், துப்புரவாளர் தொகுப்பூதியத்தில் 4 பணியிடங்கள், காலமுறை ஊதியத்தில் துப்புரவாளர் ஒரு பணியிடம் என 17 காலி பணியிடங்களுக்கு விண்ணப்பங்கள் கோரப்பட்டிருந்தது.இதற்கு தமிழில் எழுத படிக்க தெரிந்தால் போதும். குமரி மாவட்டத்தில் குடியிருக்க வேண்டும். 18 முதல் 35 வயதுக்கு உள்பட்டவர்களாக இருக்க வேண்டும். ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினருக்கும், சமையல் அனுபவம் உள்ளவர்களுக்கும் முன்னுரிமை அளிக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.