துறை சார்ந்த தலைவர்களே பதவி உயர்வு வழங்கலாம்: அரசு உத்தரவு

சென்னை: தமிழக அரசின் துறை சார்ந்த பதவி உயர்வுகளை துறை தலைவர்களே அனுமதிக்கலாம் என்று தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது.இதுகுறித்து தமிழக அரசு வெளியிட்டுள்ள உத்தரவில் கூறி இருப்பதாவது:தமிழக  அரசின் பல்வேறு துறைகளில் பணிபுரியும் அலுவலர்களுக்கு பதவி உயர்வு அளிக்கும்போது  தமிழ்நாடு பணியாளர் தேர்வாணையத்தின்  தலைவர் தலைமையில் அமைக்கப்பட்ட  குழுவிடம் ஒப்புதல் பெற வேண்டிய நிலை இருந்தது. இதனை மாற்றி குறிப்பிட்ட  பதவி உயர்வுகளுக்கு  மட்டும் பதவி உயர்வுக்கான ஆணையத்தின் பரிந்துரைகளை  பெற்றால் போதுமானது என்றும் ஆரம்ப நிலை பதவி உயர்வுகளை துறை தலைவர்களே   அங்கீகரிக்கலாம்.

Related Stories: