நாகர்கோவில்: நாகர்கோவில் நாகராஜா கோயிலில் ரூ.18 லட்சம் செலவில் கட்டப்பட்டுள்ள புதிய கழிவறை கட்டிடத்தை உடனடியாக திறக்க வேண்டும் என பக்தர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நாகர்கோவிலில் பிரசித்தி பெற்ற நாகராஜா கோயில் உள்ளது. இந்த கோயிலுக்கு தினமும் ஏராளமான பக்தர்கள் வருகை தருவது உண்டு. கொரோனா ஊரடங்கு காரணமாக கடந்த 6 மாதங்களாக பூட்டப்பட்டு இருந்த கோயில் செப்டம்பரில் இருந்து திறக்கப்பட்டுள்ளது. பொது போக்குவரத்தும் நடைபெறுவதால், வெளியூர்களில் இருந்தும் பக்தர்கள் அதிகளவில் வந்த வண்ணம் உள்ளனர். ஞாயிற்றுக்கிழமைகளில் கூட்டம் அதிகமாக உள்ளது. இந்த கோயிலில் பக்தர்கள் வசதிக்காக கழிவறைகள் இயங்கி வந்தன. ஆனால் இந்த கட்டிடம் மிக மோசமான நிலையில் இருப்பதால் எந்த நேரத்திலும் இடிந்து விழும் நிலை உள்ளது.