சென்னை, மதுரை, விருதுநகர் சுற்றுவட்டார பகுதிகளில் இடியுடன் கூடிய பலத்த மழை!

சென்னை: சென்னை அடுத்த மறைமலை நகரில் கனமழை பெய்து வருகிறது. சிறிது நேரம் மழை ஓய்ந்திருந்த நிலையில் மீண்டும் கனமழை பெய்து வருகிறது. இதேபோல் மதுரை மாவட்டம் வாடிப்பட்டி மற்றும் சுற்றுவட்டார ஊர்களில் பலத்த மழை பெய்து வருகிறது. செம்மினிபட்டி, குட்லாடம்பட்டி, ராமையன்பட்டி, கட்டக்குளம் உள்ளிட்ட இடங்களில் மழை பெய்து வருகிறது. தொடர்ந்து விருதுநகர் மாவட்டம் ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார இடங்களிலும் கனமழை பெய்து வருகிறது.

Related Stories: