2021ம் ஆண்டு சட்டசபை தேர்தலையொட்டி தமிழகத்தின் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது!!

சென்னை: தமிழகத்தில் 2021ம் ஆண்டு மே மாதம் சட்டசபை தேர்தல் நடைபெறுவதையொட்டி வரைவு வாக்காளர் பட்டியல் இன்று வெளியிடப்பட்டது.  தமிழகம் முழுவதும் அந்தந்த மாவட்ட கலெக்டர்களும், சென்னையில் மாநகராட்சி ஆணையரும் வரைவு வாக்காளர் பட்டியலை வெளியிடுகிறார்கள்.தருமபுரி மாவட்ட வரைவு வாக்காளர் பட்டியலை ஆட்சியர் கார்த்திகா வெளியிட்டார்.தருமபுரி மாவட்டத்தில் மொத்தம் 12.35 லட்சம் வாக்காளர்கள் உள்ளனர். கூடுதலாக 2,461 பேர் சேர்க்கப்பட்டுள்ளனர்.தருமபுரி மாவட்ட வாக்காளர்களில் ஆண்கள் 6.08 லட்சம், பெண்கள் 6.27 லட்சம், 3ம் பாலினம் 138 பேர் உள்ளனர்.  இதைத்தொடர்ந்து நவம்பர் 16ம் தேதி (இன்று) முதல் டிசம்பர் 15ம் தேதி வரை ஒரு மாதம் வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க, நீக்கம், திருத்தம் செய்ய வாய்ப்பு அளிக்கப்படுகிறது. அலுவலகம் செல்பவர்கள் வசதிக்காக நவம்பர் 21 மற்றும் 22ம் தேதி (சனி. ஞாயிறு), டிசம்பர் 12, 13 ஆகிய தேதிகளில் சிறப்பு முகாமும் நடத்தப்படுகிறது.

Related Stories: