சென்னை: பாஜவில் இணைந்துவிட்டேனா என்பது குறித்து நடிகர் சந்தானம் விளக்கம் அளித்துள்ளார். ஆர்.கண்ணன் இயக்கத்தில் சந்தானம் ஹீரோவாக நடித்த பிஸ்கோத் என்ற படம் தீபாவளியன்று வெளியானது. இதுகுறித்த செய்தியாளர் சந்திப்பு நேற்று வடபழநியில் உள்ள தியேட்டரில் நடந்தது. அப்போது சந்தானம் அளித்த பேட்டி:
கொரோனா காலத்தில் மக்கள் வெளியே வருவது மன உளைச்சல் நிறைந்தது. இதை தாண்டி தியேட்டருக்கு ரசிகர்கள் வருவார்களா என்ற சந்தேகத்தில் படத்தை ரிலீஸ் செய்தோம். தற்போது ரசிகர்கள் ஆதரவு கொடுத்திருக்கிறார்கள். ஓடிடி என்பது பூஜை அறை. சினிமா தியேட்டர் என்பது கோயில் மாதிரி.