சென்னை: தீபாவளி அன்று நள்ளிரவு போக்குவரத்து கூடுதல் கமிஷனர் கண்ணன் உத்தரவுப்படி போக்குவரத்து துணை கமிஷனர் செந்தில்குமார் தலைமையில் போலீசார் சென்னை முழுவதும் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.அதன்படி, திருவல்லிக்கேணி போக்குவரத்து உதவி கமிஷனர் தலைமையிலான போலீசார், மெரினா காமராஜர் சாலையில் காந்தி சிலை அருகே வாகன சோதனையில் ஈடுபட்டபோது, பைக் ரேசில் ஈடுபட்ட 10 பேரை மடக்கி பிடித்தனர்.