பெரம்பூர்: திருவிக நகர் மதுரை சாமி மடம் மெயின் ேராட்டில் ஆனந்தன் என்பவருக்கு சொந்தமான வீட்டின் 2வது தளத்தில் 3 குடிசை அமைத்து வாடகைக்கு விட்டுள்ளார். இதில், முருகன், திருமலை, தினேஷ் ஆகியோர் குடும்பத்துடன் வசித்து வருகின்றனர். இந்நிலையில், நேற்று மதியம் 12 மணிக்கு அருகில் சிலர் வெடித்த ராக்கெட் பட்டாசு இங்குள்ள ஒரு குடிசை மீது விழுந்து தீப்பிடித்தது.