சென்னை: முன்னாள் பிரதமர் நேருவின் 132வது பிறந்தநாளை முன்னிட்டு நேற்று முன்தினம் கிண்டி கத்திபாராவில் உள்ள அவரது சிலை மலர்களால் அலங்கரிக்கப்பட்டு இருந்தது. தமிழக அரசின் சார்பாக அமைச்சர்கள் ஜெயக்குமார், மா.பா.பாண்டியராஜன், பென்ஜமின் ஆகியோர் நேருவின் சிலையின் கீழ் அமைக்கப்பட்டிருந்த அவரது படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தினர்.பின்னர், அமைச்சர் ஜெயக்குமார் அளித்த பேட்டி: தமிழகத்தில் தமிழும், ஆங்கிலமும் தான் தமிழ்நாட்டில் உள்ளது. இந்தி திணிப்பை ஒருபோதும் ஏற்க மாட்டோம். கொரோனா காலம் என்ற அடிப்படையில்தான் வேல் யாத்திரைக்கு அரசு தடை விதித்தது.