மதுரை: கடற்கரை மேலாண்மை சட்டத்தை மீறி கடற்கரை பகுதியில் கட்டிடங்கள் உள்ளதா என்பது குறித்து, அரசுத் தரப்பில் பதிலளிக்க வேண்டுமென ஐகோர்ட் கிளை உத்தரவிட்டுள்ளது. கன்னியாகுமரி மாவட்டம், தேங்காய்பட்டணத்தைச் சேர்ந்த அந்தோணி கன்சோலின், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனு:- எங்களுக்கு சொந்தமான இடத்தில் மீன்களை சேகரித்து வைப்பதற்கான நிறுவனம் நடத்துகிறேன். வெளிமாநிலத்தவர் இங்கு வந்து மீன்களை வாங்கிச் செல்கின்றனர். இங்கு கட்டிடம் கட்ட பைங்குளம் ஊராட்சி ஒப்புதல் அளித்துள்ளது. இதனிடையே, ஐஸ் பிளாண்ட் கட்டிடத்திற்கு அனுமதி கேட்டு மாவட்ட சுற்றுச்சூழல் பொறியாளரிடம் விண்ணப்பித்தேன். அவர், மனுவை நகர் மற்றும் ஊரமைப்பு திட்ட துணை இயக்குநருக்கு பரிந்துரைத்துள்ளார்.