திருவள்ளூர்: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்தில் ஆடுகளுக்கு கிராக்கி ஏற்பட்டுள்ளது. இதனால் இறைச்சி விலை கிலோ ரூ.50 முதல் ரூ.100 வரை உயரும் நிலை ஏற்பட்டுள்ளது. தமிழகத்தில் கடந்த சில ஆண்டுகளாக பருவமழை பொய்த்து வந்த நிலையில், விவசாயிகளின் முக்கிய வாழ்வாதாரமாக இருந்த விவசாயம் முடங்கியது. இதனால் கால்நடை வளர்பில் விவசாயிகள் ஆர்வம் காட்டி வந்தனர். வறட்சியால் ஆடுகளுக்கு பசுந்தீவனம் கிடைக்காததால், ஆடுகள் நோஞ்சான்களாக உள்ளன. இந்தவேளையில், தீபாவளி பண்டிகை இன்று கொண்டாடப்பட உள்ளது.