சென்னை: ஐபிஎஸ் அதிகாரிகளான டிஜிபி சுனில் குமார், மாநகர போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால், கூடுதல் டிஜிபி சந்திப் ரத்தோர், கூடுதல் கமிஷனர் தினகரன், ஐஜி சந்தோஷ்குமார், இணை கமிஷனர் பாலகிருஷ்ணன், மாதவரம் உதவி கமிஷனர் அருள் சந்தோஷ் முத்து உள்ளிட்ட அதிகாரிகள் பெயரில் போலி பேஸ்புக் கணக்கு தொடங்கி கொரோனா நிதி என்ற பெயரில் பல கோடி ரூபாய் மோசடி செய்துள்ளனர். மத்திய குற்றப்பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தினர். அதில், ராஜஸ்தான் மோசடி கும்பலை சேர்ந்த ஷகீல்கான், ரவீந்தரகுமார் ஆகியோர் இந்த மோசடியை செய்தது தெரியவந்தது. அதைதொடர்ந்து போலீஸ் கமிஷனர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவுப்படி மத்திய குற்றப்பிரிவு தனிப்படையினர் கடந்த வாரம் ராஜஸ்தான் சென்றனர்.