தி.நகர் ரங்கநாதன் தெருவில் சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் நேரில் ஆய்வு

சென்னை: சென்னையில் மக்கள் அதிகம் கூடும் வணிக வளாகங்கள் உள்ள பகுதிகளில் கொரோனா வைரஸ் தடுப்பு குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது என தி.நகர் ரங்கநாதன் தெருவில் ஆய்வு செய்த சுகாதாரத்துறைச் செயலர் ராதாகிருஷ்ணன் தெரிவித்துள்ளார். கொரோனா வைரஸ் தொற்று குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் சென்னையில் தியாகராய நகர், புரசைவாக்கம், வண்ணாரப்பேட்டை, பாரிமுனை மற்றும் கோயம்பேடு ஆகிய பகுதிகளில் மாநகராட்சியின் சார்பில் விழிப்புணர்வு வாசகங்கள் அடங்கிய சிறுசிறு துண்டுப்பிரசுரங்கள் வழங்கப்பட்டு வருகின்றன.

Related Stories: