பாடாலூர் அருகே ஏரியில் இறந்து மிதந்த மீன்கள்

பாடாலூர் : ஆலத்தூர் தாலுகா பாடாலூர் அருகே ஏரியில் மர்மமான முறையில் மீன்கள் இறந்து மிதந்தது.பெரம்பலூர் மாவட்டம், ஆலத்தூர் தாலுகா ஆதனூர் கிராமத்திலுள்ள முத்தப்புடையார் ஏரியை அதே கிராமத்தைச் சேர்ந்த 10 பேர் குத்தகைக்கு எடுத்து அந்த ஏரியில் உள்ள தண்ணீரில் மீன் வளர்த்து வருகின்றனர். இந்த ஏரியில் வளர்ந்த மீன்கள் நேற்று திடீரென இறந்து மிதந்தது. இதனை பார்த்த பொதுமக்கள் மருவத்தூர் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த மருவத்தூர் போலீசார் சம்பவ இடத்திற்கு வந்து மீன்கள் இறந்து மிதப்பதற்கான காரணம் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Related Stories: