உடுமலை : திருமூர்த்தி அணையில் இருந்து பிஏபி உடுமலை கால்வாயில் 2-ம் மண்டலத்துக்கான 3-வது சுற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது. ஆனால் கடைமடை பகுதிக்கு தண்ணீர் வராமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர்.தாராபுரம் சாலை தாந்தோணி அருகே, கால்வாயின் பக்கவாட்டு சிலாப் கற்கள் பெயர்ந்து விழுந்து கிடக்கின்றன. இதனால் கரை பலவீனமாக இருப்பதோடு, கற்கள் உள்ளே விழுந்து கிடப்பதால் சீராக தண்ணீர் செல்ல முடியாமல் தடை ஏற்படுகிறது.