சென்னை: டெல்லியில் உள்ள மயூர் விகார் பள்ளி வளாகத்தில் புதிய கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிசாமி நேற்று திறந்து வைத்தார். தமிழக அரசு வெளியிட்ட அறிக்கை: டெல்லி வளர்ச்சிக் குழுமத்தால், டெல்லி தமிழ்க் கல்விக் கழகத்திற்கு மயூர் விகாரில் புதிய பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டது. மயூர் விகாரில் பள்ளிக் கட்டிடம் கட்டுவதற்கு நிதியுதவி வேண்டி, முதல்வரிடம் டெல்லி தமிழ்க் கல்விக் கழகம் கோரிக்கை வைத்தது. இந்த கோரிக்கையை ஏற்று, தமிழக அரசின் சார்பில் ரூ.5 கோடி நிதி ஒதுக்கீடு செய்து முதல்வர் ஆணையிட்டார். இதை தொடர்ந்து, கடந்த 26.10.2018 அன்று கட்டிடத்திற்கு முதல்வர் எடப்பாடி பழனிசாமி காணொலிக் காட்சி மூலமாக அடிக்கல் நாட்டினார். மயூர் விகார் பள்ளி கட்டிடத்தை முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி நேற்று காணொலிக் காட்சி மூலமாக திறந்து வைத்தார்.