தீபாவளி பண்டிகையால் ஆன்லைன் வகுப்புக்கு 4 நாள் விடுமுறை

சென்னை: தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு பள்ளி மாணவர்களுக்கான ஆன்லைன் வகுப்புகளுக்கு 4 நாட்கள் விடுமுறை அறிவித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. பள்ளி மாணவர்களுக்கு ஏப்ரல் மாதம் முதல் ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. இதனால் பள்ளி மாணவர்கள் உள்பட கல்லூரி மாணவர்களும் வீடுகளில் இருந்தபடியே ஆன்லைன் மூலம் வகுப்புகளை கவனித்து வருகின்றனர். இந்த வகுப்புகள் காலை 9.30 மணிக்கே தொடங்கி விடுகின்றன. மாலை 6 மணி வரையும் நடக்கின்றன.

இதனால் மாணவ மாணவியர் வீடுகளில் இருந்தே வகுப்புகளை கவனிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பாட வகுப்புகள் தவிர்த்து, வாரத் தேர்வுகள், மாதாந்திர தேர்வுகளும் நடத்தப்பட்டு வருவதால் மாணவ மாணவியர் வீடுகளை விட்டு வெளியில் வர முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்நிலையில், 14ம் தேதிநாடு முழுவதும் தீபாவளிப் பண்டிகை கொண்டாப்பட உள்ளதால், இன்று முதல் 4 நாட்களுக்கு ஆன்லைன் வகுப்புகளுக்கு விடுமுறை அளித்து பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இதனால், 13ம் தேதி முதல் 16ம் தேதி வரை ஆன்லைன் வகுப்புகள் நடக்காது.

Related Stories: