புழல்: சென்னை மற்றும் புறநகர் பகுதிகளான புழல், செங்குன்றம், சோழவரம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்று காலை முதல் விட்டுவிட்டு மழை பெய்தது. இதனால் தாழ்வான பகுதிகளில் மழைநீர் தேங்கி ஆங்காங்கே குளம் போல் காட்சியளிக்கிறது. குறிப்பாக, சென்னை மாதவரம் முதல் புழல் காவாங்கரை சாமியார் மடம், செங்குன்றம் பாடியநல்லூர், சோழவரம், காரனோடை வரை உள்ள சென்னை - கொல்கத்தா தேசிய நெடுஞ்சாலையின் இரண்டு பக்கங்களிலும் பெருமளவில் மழைநீர் தேங்கி போக்குவரத்து பாதிக்கப்பட்டது.