தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் : பிரதமருக்கு பாஜ மூத்த தலைவர் கடிதம்

புதுடெல்லி, :திபெத்திய ஆன்மிக தலைவர் தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, பாஜ மூத்த தலைவர் சாந்தா குமார் கடிதம் எழுதியுள்ளார்.பீகார் சட்டப்பேரவை தேர்தலில் பீகாரில் ஐக்கிய ஜனதா தளம், பாஜ கூட்டணி வெற்றிக்காக முதல்வர் நிதிஷ் குமாருக்கு திபெத் ஆன்மிக தலைவர் தலாய் லாமா நேற்று வாழ்த்து தெரிவித்தார். மேலும் பல அரசியல் கட்சி தலைவர்கள் மற்றும் பிரமுகர்கள் வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

இந்நிலையில், அடுத்த சில மணி நேரங்களில் தலாய் லாமாவுக்கு, நாட்டின் உயரிய விருதான பாரத ரத்னா விருதை வழங்க வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு இமாச்சல பிரதேசத்தின் முன்னாள் முதல்வரும், பாஜவின் மூத்த தலைவர்களில் ஒருவருமான சாந்தா குமார் கடிதம் எழுதியுள்ளார். அதில், தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா விருது வழங்கி கவுரவிக்க வேண்டும். இதனால் இந்தியாவும் தன்னை கவுரவித்து கொள்ளும். 1950ல் காங்கிரஸ் அரசாங்கம் மிகப்பெரிய பாவம் செய்தது. அப்போது திபெத்தை கைப்பற்ற சீனாவை அனுமதித்தது. இன்று சீனா உலகில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளது. தலாய் லாமாவுக்கு பாரத ரத்னா வழங்குவது கடந்த காலத்தில் செய்த தவறை சரிசெய்ய ஒரு பொன்னான வாய்ப்பாகும். தலாய் லாமாவை கவுரவிப்பது மற்றும் ஐ.நா.வில் திபெத்திய பிரச்சினையை எழுப்புவது ஆகிய நடவடிக்கைகள் மூலம் உலகுக்கு சீனாவை முழுமையாக அம்பலப்படுத்தலாம்’ என்று கூறியுள்ளார்.

Related Stories: