சென்னை: மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் காணொலி காட்சி வாயிலாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளிவர உள்ள நிலையில் தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்ய பிரதா சாகு, மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார். சென்னை தலைமை செயலகத்தில் காணொலி காட்சி வாயிலாக ஆலோசனையானது நடைபெற்று கொண்டிருக்கிறது. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடுவதற்கு முன்பாகவே பலகட்டங்களாக மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு புதிதாக பெயர் சேர்த்தல், நீக்குதல், இறந்தவர்களை பட்டியலில் இருந்து நீக்குவது உள்ளிட்ட விவகாரங்கள் தொடர்பாக கலந்து ஆலோசித்த பின்பு, வரைவு வாக்காளர் பட்டியல் தயாரிப்பதற்கான பணிகள் தீவிரமாக நடைபெற்று கொண்டிருக்கிறது. இந்த நிலையில் நவம்பர் 16ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியலும், தொடர்ந்து அடுத்தாண்டு ஜனவரி 20ம் தேதி இறுதி வாக்காளர் பட்டியலும் வெளியிட திட்டமிடப்பட்டிருந்தது. இது குறித்து தற்போது ஆலோசனை கூட்டத்தில் விவாதிக்கப்படவுள்ளது.