சென்னை: தமிழக மீன்வளத்துறை அமைச்சர் ஜெயக்குமார் வெளியிட்டுள்ள அறிக்கை: 2018ம் ஆண்டு பல்வேறு நிகழ்வுகளில் இலங்கை கடற்படையினரால் பிடிக்கப்பட்ட தமிழகத்தை சேர்ந்த 165 தமிழக மீனவர்களின் படகுகள் இலங்கை அரசால் விடுவிக்கப்பட்டன. இதனை தொடர்ந்து தமிழக அரசு மீன்வளத்துறை அலுவலர்கள், மீனவ பிரதிநிதிகள், மெக்கானிக்குகள் மற்றும் தச்சர்கள் கொண்ட குழுவினை இலங்கை–்கு அனுப்பி மீட்கும் நிலையில் உள்ள 36 விசைப்படகுகள் அரசு செலவில் 47.95 செலவில் சரி செய்யப்பட்டு தமிழகம் கொண்டு வரப்பட்டது. மோசமான வானிலை காரணமாக 4 படகுகளை தமிழகம் கொண்டு வர இயலவில்லை.