சென்னை: கல்பாக்கம் அடுத்த ஆமைப்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் அரிகிருஷ்ணன் கூலித் தொழிலாளியான இவருக்கு 13 வயதில் ஒரு மகன் மற்றும் பிரியங்கா 16, செண்பகவள்ளி 11 ஆகிய மகள்கள் இருந்தனர். நத்தம் கிராமத்திலுள்ள அரசு பள்ளியில் பிரியங்கா 10ம் வகுப்பும், செண்பகவள்ளி 6ம் வகுப்பும் படித்து வந்தனர். இந்நிலையில், நேற்று முன்தினம் காலை அரிகிருஷ்ணனும், அவரது மனைவி சீதாவும் கல்பாக்கம் மற்றும் அனுபுரம் ஆகிய பகுதிகளில் நடக்கின்ற ஒப்பந்த பணிகளில் கூலி வேலைக்காக சென்று விட்டு மாலை வீடு திரும்பியுள்ளனர். அப்போது, வீட்டிலிருந்த இரண்டு பெண் பிள்ளைகளும் காணாமல் போயிருந்தது கண்டு பல இடங்களில் தேடி வந்தனர்.