நாகை: கடல் சீற்றத்துடன் காணப்படும் நாகூர் கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளிக்கும் சுற்றுலா பயணிகளை தடுக்க போலீசார் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சமூக ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.கொரோனா வைரஸ் தொற்று குறைந்ததை தொடர்ந்து பொது இடங்களில் சுற்றுலா பயணிகளின் வருகை அதிகரிக்க தொடங்கியுள்ளது. இதன்படி புகழ்பெற்ற நாகூர் தற்காவிற்கு வெளி மாநில, மாவட்டங்களை சேர்ந்தவர்கள் தினமும் வருகை தருகின்றனர். இந்நிலையில் நகூர் தர்கா வரும் சுற்றுலா பயணிகள் கடல் சீற்றத்துடன் காணப்படும் நாகூர் கடற்கரையில் ஆபத்தை உணராமல் குளித்து கும்பாளம் போடுகின்றனர்.