தனியார் டிவி நிருபர் கொலைக்கு முத்தரசன் கண்டனம்

சென்னை: இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் மாநில செயலாளர் முத்தரசன் விடுத்துள்ள அறிக்கை: அரசுக்கு சொந்தமான நிலங்களை ஆக்கிரமிப்பது, கஞ்சா போன்ற போதை பொருட்களை விற்பனை செய்வது ஆகிய சமூக விரோத செயல்கள் குறித்து ஸ்ரீபெரும்புதூர் அருகே உள்ள நல்லூரில், தனியார் டிவி நிருபர் மோசஸ் அண்மையில் ஆதாரப்பூர்வமாக தொலைக்காட்சியில் செய்தி வெளியிட்டார். இந்த குற்ற செயலில் ஈடுபட்டு வரும் சமூக விரோத கும்பல்கள் கூட்டு சேர்ந்து, மோசஸை கொடூரமாக படுகொலை செய்துள்ளன. ஜனநாயகத்தின் 4வது தூணாக விளங்கும் ஊடக துறையின் சுதந்திரத்தையும், அதில் பணிபுரிகிற செய்தியாளர்கள், ஒளிப்பதிவாளர்கள், நிழற்பட நிருபர்கள் அனைவரையும் பாதுகாப்பது அரசின் கடமை பொறுப்பாகும். மோசஸ் குடும்பத்திற்கு உரிய நிவாரண நிதி வழங்க வேண்டும்.

Related Stories: