சீன பட்டாசுகளை எதிர்த்து போராட்டம்

சென்னை: தமிழ்நாடு வணிகர் சங்கங்களின் பேரமைப்பு தலைவர் ஏ.எம்.விக்கிரமராஜா வெளியிட்ட அறிக்கை: புதுப்புது சட்டங்களால் பாதிக்கப்படும் தொழில்களுக்கு, மத்திய மாநில அரசுகள் உரிய பாதுகாப்பு வழங்கி வாழ்வாதாரத்தை உறுதிபடுத்திட வேண்டும். உள்நாட்டு தயாரிப்பு பட்டாசுகளை வணிகர்களும், பொதுமக்களும் பயன்படுத்திட முன்வரவேண்டும்.மேலும் சீனப் பட்டாசுகள் கடைகளிலோ, ஆன்லைன் மூலமாகவோ விற்பனை செய்யப்படுமானால் அதனை எதிர்த்து மிகப்பெரும் போராட்டத்தை முன்னெடுப்போம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Stories: