சென்னை: நெய்வேலி முந்திரி வியாபாரி செல்வமுருகன் மரண வழக்கில் தமிழக அரசு மற்றும் சிபிசிஐடி பதிலளிக்க உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. செல்வமுருகன் மரணம் தொடர்பாக போலீசார் மீது கொலை வழக்கு பதியக்கோரிய மனைவி பிரேமாவின் வழக்கில் ஆணையிடப்பட்டுள்ளது. மேலும் வழக்கில் சிபிசிஐடியை எதிர்மனுதாரராக சேர்க்க மனுதாரர் பிரேமாவுக்கு உயர்நீதிமன்றம் உத்தரவு வழங்கியுள்ளது.