சென்னை: மத்திய பா.ஜ.க அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி. வரியை நிறைவேற்றிவிட்டதாக அ.தி.மு.க பொன்னையன் குற்றம்சாட்டியுள்ளார். தமிழகத்தில் எப்போதும் ஆட்சிக்கு வர முடியாத கட்சிகள் மத்திய அரசாக உள்ளதாக தமிழ்நாடு மாநில திட்டக்குழு துணை தலைவரும், அதிமுக முன்னாள் அமைச்சருமான பொன்னையன் தெரிவித்திருக்கிறார். சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அவர், மத்திய அரசு கொண்டு வந்த ஜி.எஸ்.டி. திட்டத்தால் தமிழக அரசிற்கு எந்த பயனும் இல்லை. மத்திய பா.ஜ.க அரசு மிருக பலத்துடன் ஜி.எஸ்.டி.யை நிறைவேற்றிவிட்டார்கள். தமிழகத்துக்கு தர வேண்டிய ரூபாய் 16 ஆயிரம் கோடியை தரவில்லை. முல்லைப்பெரியாறு, காவிரி விவகாரத்திலும் ஒன்றும் செய்யவில்லை என குறிப்பிட்டார். மேலும், காவிரி விவகாரத்தில் உச்சநீதிமன்றம் அளித்த தீர்ப்பினை காலில் மிதித்துவிட்டு கர்நாடகாவில் இருந்து இன்று வரை காவிரி நீர் திறந்துவிடப்படவில்லை.