மதுரை: மதுரை மாவட்டம், ஏ.கொக்குளத்தைச் சேர்ந்த வாசுதேவன், ஐகோர்ட் மதுரை கிளையில் தாக்கல் செய்த மனுவில், ‘‘மதுரை மாவட்டம், திருமங்கலம் மற்றும் உசிலம்பட்டி தாலுகாவில் பட்டாசு தயாரிக்கும் ஆலைகள் உள்ளன. இவை போதிய பாதுகாப்பின்றியும், அரசின் வழிகாட்டுதல்களை பின்பற்றாமலும் உள்ளன. எனவே, இவற்றின் மீது உரிய நடவடிக்கை எடுக்க உத்தரவிட வேண்டும்’’ என்று கூறியிருந்தார்.
இந்த மனு நீதிபதிகள் என்.கிருபாகரன், பி.புகழேந்தி ஆகியோர் முன் நேற்று விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், ‘‘மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் எத்தனை பட்டாசு ஆலைகள் உள்ளன? இதில் எத்தனை லட்சம் பேர் பணியாற்றுகின்றனர்.