மதுரை: சாத்தான்குளம் காவல் நிலைய ஆய்வாளர் ஸ்ரீதருக்கு ஜாமீன் வழங்க சிபிஐ எதிர்ப்பு தெரிவித்துள்ளது. உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜாமீன் கோரிய ஸ்ரீதர் வழக்கில் சிபிஐ தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனை தொடர்ந்து ஜாமீன் கோரிய ஸ்ரீதர் மனுவை வரும் செவ்வாய்கிழமைக்கு நீதிமன்றம் ஒத்திவைத்து உத்தரவிட்டது.