ஆவடி: ஆவடியில் வழிப்பறி கொள்ளையனுடன் போராடி பெண் தங்க சங்கிலியை மீட்டார். ஆவடி, ஜே.பி எஸ்டேட், 13வது தெருவை சேர்ந்தவர் சுரேஷ் (37). தனியார் நிறுவன ஊழியர். இவரது மனைவி பிரியா (31). நேற்று முன்தினம் பிரியா வீட்டிலிருந்து டெய்லர் கடைக்கு சென்றார். அப்போது, பைக்கில் வந்த 2 பேர் அவரை வழிமறித்தனர். பின்னர், அவர்களில் ஒருவன் பைக்கில் இருந்து இறங்கி வந்து பிரியாவின் கழுத்தில் கிடந்த 5 சவரன் தாலிச்செயினை பறிக்க முயன்றார். தங்க சங்கிலியை பிரியா கெட்டியாக பிடித்து கொண்டு கொள்ளையனுடன் போராடியுள்ளார். மேலும், அவர் சத்தம் போட்டு அக்கம் பக்கத்தினர் அழைத்துள்ளார்.