சேலம்: சின்னசேலத்தில் இருந்து தனி சரக்கு ரயிலில் ஆந்திராவிற்கு 81 நெல் அறுவடை இயந்திரங்கள் அனுப்பி வைக்கப்பட்டது. சேலம் ரயில்வே கோட்டத்திற்கு உட்பட்ட சின்னசேலத்தில் இருந்து நெல் அறுவடை இயந்திரங்களும், கரூரில் இருந்து கொசு வலைகளும், சேலத்தில் இருந்து ஆவின் பாலும் பல்வேறு மாநிலங்களுக்கு சரக்கு ரயிலில் அனுப்பி வைக்கப்பட்டு வருகிறது. இந்த வகையில் 6வது முறையாக சின்னசேலத்தில் இருந்து நெல் அறுவடை இயந் திரங்கள், நேற்று தனி சரக்கு ரயிலில் ஏற்றி அனுப்பி வைக்கப்பட்டது.