சென்னையில் இலங்கை தூதரகம் முற்றுகையிட முயற்சி

சென்னை: சென்னையில் இலங்கை தூதரகத்தை முற்றுகையிட முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.  இலங்கையில் கொரோனா தொற்றால் உயிரிழக்கும் முஸ்லிம்களின் உடல்களை அவர்களின் மத வழக்கத்திற்கு எதிராக எரியூட்டும் இலங்கை அரசை கண்டித்து எஸ்.டி.பி.ஐ.கட்சியின் சார்பில் சென்னையில் உள்ள இலங்கை துணை தூதரகம்  போராட்டம் நடைபெற்றது. போராட்டத்திற்கு மாநில பொதுச்செயலாளர் நிஜாம் முகைதீன் தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் அச.உமர் பாரூக், மாநில செயற்குழு உறுப்பினர் ஏ.கே.கரீம், மாவட்ட தலைவர்கள் ஜுனைத் அன்சாரி,  ரஷீத், சலீம் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.

Related Stories: