மதுரை: ஆடு துவங்கி சொகுசு கார் வரையிலும் ரூ.3 கோடிக்கு சீர்வரிசை கொடுத்து மதுரையில் நடந்துள்ள திருமணம், சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது. மதுரையில் நடந்த ஒரு திருமணத்துக்கு கொடுக்கப்பட்ட சீர்வரிசை பொருள்கள் சமூக வலைத்தளங்களில் வீடியோ, போட்டோவாக கடந்த இரு நாட்களாக வைரலாகி வருகிறது. இதில் ஆடுகள் முதல் சொகுசு கார், தங்கம், வெள்ளி பாத்திரங்கள் வரையிலும் சீர்வரிசையாக வழங்கப்படுவது காட்டப்பட்டுள்ளது. மேலும், டூவீலர், டிராக்டர், வீட்டு உபயோகப் பொருட்கள், எலக்ட்ரிக், எலக்ட்ரானிக் சாமான்கள் என அனைத்து வகை பொருட்களும் சீர்வரிசையாக வழங்கப்பட்டுள்ளன. இந்த சீர்வரிசை பொருட்களின் மதிப்பு மட்டுமே ரூ.3 கோடிக்கும் அதிகமாக இருக்கும் எனத் தெரிகிறது.