சென்னை மண்ணடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல்

சென்னை: சென்னை மண்ணடியில் ரூ.60 லட்சம் மதிப்புள்ள வெளிநாட்டு பணம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கேரளத்தை சேர்ந்த முகமது அர்சத் (42), ஜியாஸ் (40) இருவரிடம் அமெரிக்க டாலர்கள், சவூதி ரியால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இருவரையும் கைது செய்த போலீசார் அமலாக்கத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். உரிய ஆவணங்கள் இல்லாததால் பறிமுதல் செய்யப்பட்டது ஹவாலா பணமா? என்ற கோணத்தில் விசாரணை நடைபெறுகிறது.

Related Stories: