தேடப்படும் குற்றவாளி சதுர்வேதி சாமியாரை கைது செய்ய சென்னை மகளிர் நீதிமன்றம் ஒருவாரம் கெடு!

சென்னை: தேடப்படும் குற்றவாளி சதுர்வேதி சாமியாரை கைது செய்ய சென்னை மகளிர் நீதிமன்றம் ஒருவாரம் கெடு விதித்துள்ளது. பெண்ணை கடத்தி, பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் 2004ல் சாமியார் சதுர்வேதி கைது செய்யப்பட்டார். ஜாமினில் வெளிவந்த சதுர்வேதி வழக்கு விசாரணைக்கு ஆஜராகாமல் கடந்த 15 ஆண்டாக தலைமறைவாக உள்ளார். சதுர்வேதி தொடர்பான வழக்கை விசாரித்து வரும் மகளிர் நீதிமன்றம் சதுர்வேதியை தேடப்படும் குற்றவாளியாக அறிவித்தது.

Related Stories: